1139 | கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை- எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (3) |
|