1139கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக்
      கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி
      அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை-
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட
      இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே             (3)