1141கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி
      கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்
      பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்-தன்னை-
மறை வளர புகழ் வளர மாடம்தோறும்
      மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே            (5)