1148மின்னும் ஆழி அங்கையவன் செய்யவள்
      உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய
      பரன் இடம்-வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர
      பிணி அவிழ் கமலத்துத்
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு
      திருவயிந்திரபுரமே             (2)