1152கூன் உலாவிய மடந்தை-தன் கொடுஞ் சொலின்
      திறத்து இளங் கொடியோடும்
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன்
      இடம்-கவின் ஆரும்
வான் உலாவிய மதி தவழ் மால் வரை
      மா மதிள் புடை சூழ
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய
      திருவயிந்திரபுரமே             (6)