1156மூவர் ஆகிய ஒருவனை மூவுலகு
      உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச தண்
      திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி
      கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்
      பாவங்கள் பயிலாவே             (10)