1157 | ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா- தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த் தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (1) |
|