1161 | கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர் பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5) |
|