1181 | தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்-கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (5) |
|