1217 | நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில்போல் எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்-எத் திசையும் கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (1) |
|