1219 | கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர் இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (3) |
|