1220 | சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்- முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (4) |
|