1223 | தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல் அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (7) |
|