1225 | விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப் பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (9) |
|