| 1226 | வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார் கண்டார் வணங்கக் களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய் விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே (10) |
|