1229 | அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும் முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும் முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3) |
|