1231 | மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5) |
|