1233 | விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்- இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால் வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே <7> |
|