1239 | உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்தக் கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்-மருங்கு எங்கும் பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3) |
|