1240 | ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம்-மல்லிகை செங்கழுநீர் சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4) |
|