1241 | கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக் களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம்-வளங் கொள் பொழில் அயலே அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5) |
|