முகப்பு
தொடக்கம்
1257
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன்
கதிர் முடி-அவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு
அளித்தவன் உறை கோயில்-
செம் பலா நிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள் சூழ்
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர
்-வண்புருடோத்தமமே (1)