முகப்பு
தொடக்கம்
1259
அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று
அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன்
உகந்து இனிது உறை கோயில்-
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்
குல மயில் நடம் ஆட
வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர்
-வண்புருடோத்தமமே (3)