1259அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று
      அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன்
      உகந்து இனிது உறை கோயில்-
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்
      குல மயில் நடம் ஆட
வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர்
      -வண்புருடோத்தமமே             (3)