1266மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்
      வண்புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்
      ஆலி மன் அருள் மாரி
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப்
      பத்தும் வல்லார் உலகில்
எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ
      ரோடும் கூடுவரே             (10)