முகப்பு
தொடக்கம்
1266
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்
வண்புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்
ஆலி மன் அருள் மாரி
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப்
பத்தும் வல்லார் உலகில்
எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ
ரோடும் கூடுவரே (10)