முகப்பு
தொடக்கம்
1267
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்
பேர் அருளாளன் எம் பிரானை
வார் அணி முலையாள் மலர்-மகளோடு
மண்-மகளும் உடன் நிற்ப
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை-
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (1)