1270வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி
      மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு அறும் அமரர் அடி-இணை வணங்க
      அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானை-
      கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே             (4)