1271தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே
      என்று சென்று அடைந்தவர்-தமக்குத்
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்
      தயரதன் மதலையை சயமே
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான்-தன்னை-நான் அடியேன்
      கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (5)