1272மல்லை மா முந்நீர் அதர்பட மலையால்
      அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை
      கலங்க ஓர் வாளி தொட்டானை-
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
அல்லி மா மலராள்-தன்னொடும் அடியேன்
      கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (6)