1274அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
      துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்
      மேவிய வேத நல் விளக்கை
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
மன்று-அது பொலிய மகிழ்ந்து நின்றானை-
      வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே            (8)