1278 | பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்- நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம் சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (2) |
|