முகப்பு
தொடக்கம்
128
வைத்த நெய்யும் காய்ந்த பாலும்
வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன்
எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய்;
ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்து அனைய முறுவல் செய்து
மூக்கு உறிஞ்சி முலை உணாயே (2)