128வைத்த நெய்யும் காய்ந்த பாலும்
      வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன்
      எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய்;
      ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்து அனைய முறுவல் செய்து
      மூக்கு உறிஞ்சி முலை உணாயே             (2)