1280 | வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்- ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச் சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (4) |
|