1281 | கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்- மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (5) |
|