1283 | பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்- கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (7) |
|