1285 | ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்- ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர் சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (9) |
|