1287தூம்பு உடைப் பனைக் கை வேழம்
      துயர் கெடுத்தருளி மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்
      கடு மழை காத்த எந்தை-   
பூம் புனல் பொன்னி முற்றும்
      புகுந்து பொன் வரன்ற எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (1)