1289மாத் தொழில் மடங்கச் செற்று
      மருது இற நடந்து வன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை
      செவ்வித் தோள் புணர்ந்த எந்தை-
நாத் தொழில் மறை வல்லார்கள்
      நயந்து அறம் பயந்த வண் கைத்
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (3)