1290தாங்கு-அரும் சினத்து வன் தாள்
      தடக் கை மா மருப்பு வாங்கி
பூங் குருந்து ஒசித்து புள் வாய்
      பிளந்து எருது அடர்த்த எந்தை-
மாங்கனி நுகர்ந்த மந்தி
      வந்து வண்டு இரிய வாழைத்
தீங் கனி நுகரும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (4)