1294சங்கையும் துணிவும் பொய்யும்
      மெய்யும் இத் தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப்
      பொருள்களும் ஆய எந்தை-
பங்கயம் உகுத்த தேறல்
      பருகிய வாளை பாய   
செங் கயல் உகளும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே   (8)