1296திங்கள் தோய் மாட நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானை   
மங்கையர் தலைவன் வண் தார்க்
      கலியன் வாய் ஒலிகள் வல்லார்
பொங்கு நீர் உலகம் ஆண்டு
      பொன்-உலகு ஆண்டு பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
      ஊடு போய் விளங்குவாரே             (10)