1297தா அளந்து உலகம் முற்றும்
      தட மலர்ப் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த
      நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும்
      மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
      கண்ணனே களைகண் நீயே             (1)