1298மண் இடந்து ஏனம் ஆகி
      மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று
      வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார்-தம்மைத்
      தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (2)