130கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட
      கள்ளச் சகடு கலக்கு அழிய
பஞ்சி அன்ன மெல்லடியால்
      பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே
      ஆயர் கூட்டத்து அளவன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால்
      வலைப்படுத்தாய் முலை உணாயே             (4)