முகப்பு
தொடக்கம்
1300
முனைமுகத்து அரக்கன் மாள
முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே
அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்
சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்
கனை கழல் காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (4)