1300முனைமுகத்து அரக்கன் மாள
      முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே
      அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்
      சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்
கனை கழல் காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (4)