1301பட அரவு உச்சி-தன்மேல்
      பாய்ந்து பல் நடங்கள்செய்து
மடவரல் மங்கை-தன்னை
      மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாடத்
      தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (5)