1302மல்லரை அட்டு மாள
      கஞ்சனை மலைந்து கொன்று
பல் அரசு அவிந்து வீழப்
      பாரதப் போர் முடித்தாய்
நல் அரண் காவின் நீழல்
      நறை கமழ் நாங்கை மேய
கல் அரண் காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே            (6)