1303மூத்தவற்கு அரசு வேண்டி
      முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ
      மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்து அமர் சோலை ஓங்கி
      புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்
காத்தனே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (7)