முகப்பு
தொடக்கம்
1303
மூத்தவற்கு அரசு வேண்டி
முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ
மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்து அமர் சோலை ஓங்கி
புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்
காத்தனே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (7)