1304ஏவு இளங் கன்னிக்கு ஆகி
      இமையவர்-கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக்
      கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
      புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய
      கண்ணனே களைகண் நீயே             (8)