1305சந்தம் ஆய் சமயம் ஆகி
      சமய ஐம் பூதம் ஆகி
அந்தம் ஆய் ஆதி ஆகி
      அரு மறை-அவையும் ஆனாய்
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்
      மட மயில் ஆலும் நாங்கைக்
கந்தம் ஆர் காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (9)