1306மா வளம் பெருகி மன்னும்
      மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
      கண்ணனைக் கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார்
      பார்மிசை அரசர் ஆகிக்
கோ இள மன்னர் தாழக்
      குடை நிழல் பொலிவர்-தாமே             (10)