1317கவள யானைக் கொம்பு ஒசித்த
      கண்ணன் என்றும் காமரு சீர்
குவளை மேகம் அன்ன மேனி
      கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாடம் நீடு நாங்கைத்
      தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (1)